தமிழக செய்திகள்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக தலா 25 சதவீதம் இடங்கள்; உயர்கல்வித்துறை அனுமதி

உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் டி.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

அரசு கல்லூரிகளில் 2021-22-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகளின் நலன் கருதி 2021-22-ம் கல்வியாண்டில் தேவையுள்ள கலை பாடப்பிரிவுகளில் 25 சதவீத இடங்களும், அறிவியல் பாடப்பிரிவுகளில் ஆய்வக வசதிக்கேற்ப 25 சதவீத இடங்களும் கூடுதலாக அனுமதிக்க வேண்டுமென்று கல்லூரி கல்வி இயக்குனர் அரசிடம் கேட்டு இருந்தார்.

கல்லூரி கல்வி இயக்குனரின் கருத்துருவை பரிசீலித்த அரசு 2021-22-ம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ள நிலையில், இக்கல்வி ஆண்டுக்கு கலை பாடப்பிரிவுகளுக்கு 25 சதவீதம் கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கேற்ப 25 சதவீதம் கூடுதலாகவும் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து ஆணையிடுகிறது. இந்த கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு சார்ந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

கடந்த கல்வியாண்டில் (2020-21) அரசு கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் கூடுதலாக தலா 20 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்