தமிழக செய்திகள்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: டாஸ்மாக் கடையை முற்றுகையிடும் போராட்டம் ரத்து

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் டாஸ்மாக் கடையை முற்றுகையிடும் போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நாளை (வியாழக்கிழமை) முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ் தலைமையில் நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், டாஸ்மாக் சில்லறை விற்பனை பிரிவு தாசில்தார் மதிவாணன், லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் ஜோதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் போராட்ட குழுவினர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் 2 மாதங்களுக்குள் பழையஜெயங்கொண்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நாளை நடைபெற இருந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிடும் போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு