தமிழக செய்திகள்

அதிமுக முன்னாள் எம்எல்ஏவை கடத்தி பணம் பறித்த வழக்கு - 3 தனிப்படைகள் அமைப்பு

அதிமுக முன்னாள் எம்எல்ஏவை கடத்தி பணம் பறித்த வழக்கில் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரன் புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் கடந்த 24-ந்தேதி பவானிசாகர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஒரு கும்பல் தன்னை காரில் கடத்திச் சென்று ஒன்றரை கோடி ரூபாயை பறித்துச் சென்றதாகவும் அதில் அரியப்பம்பாளையம் நேரு நகரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் நிர்வாகி மிலிட்டரி சரவணன், மோகன் மற்றும் அடையாளம் தெரியாத 6 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு