தமிழக செய்திகள்

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடக்கம்: மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் - மெட்டா நிறுவனம்

விரைவாக சிக்கலைத்தீர்த்து விட்டோம் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

உலகின் முன்னணி சமூக வலைதளங்களாக விளங்குபவை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம். மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் இந்த வலைதளங்கள் நேற்று இரவில் திடீரென முடங்கின. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்பற்று இருந்தன. உலகம் முழுவதும் இந்த தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக தெரியவந்தது.

சைபர் கிரைம் ஹேக்கர்களின் கைவரிசையால் இந்த தடை ஏற்பட்டதா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்பாடு துண்டிக்கப்பட்டதா என்பது பற்றி உடனடியாக எதுவும் தெரியவரவில்லை. மெட்டா நிறுவனமும் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால் இந்த வலைதளங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், உலகமே முடங்கியதுபோல தவிப்புக்கு ஆளானார்கள். நீண்ட நேரத்திற்கு பிறகு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் சமூக வலைதளத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

இந்தநிலையில், தொழில்நுட்ப சிக்கலால், எங்களின் சில சேவைகளை அணுகுவதில் மக்கள் சிரமப்பட்டனர். நாங்கள் விரைவாக அந்த சிக்கலைத்தீர்த்துவிட்டோம். மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஆண்டிஸ்டோன் கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை