சென்னை,
மின்சார வாரியத்தில் கேங்க்மேன் பணிக்கு தேர்வான 5,493 பேருக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தங்களுக்கு உடனே பணி நியமனம் வழங்கக்கோரி, தேர்வானவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் முதல்-அமைச்சர் அலுவலகம், மின்சாரத்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு மனுக்களும் அளித்தனர்.
இந்த நிலையில் மின்சார வாரியத்தில் கேங்கமேன் பணி நியமன பிரச்சினையை களைய 4 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், மின்சார வாரியத்தின் செயலாளரை தலைவராகக் கொண்டு குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.