தமிழக செய்திகள்

கோவில் திருவிழாவில் தகராறு; 2 பேர் கைது

ஓசூர்:

பேரிகை அடுத்த அத்திமுகம் முனீஸ்வரன் கோவில் திருவிழா கடந்த 28-ந் தேதி நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த வினய் தேஜா (வயது 22), வினோத் குமார் (26) ஆகியோர் திருவிழாவில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேசினர். இதுகுறித்து அப்பகுதியினர் கண்டித்தும் கேட்கவில்லை. மேலும் இதுகுறித்து தட்டிகேட்ட அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜூ (28), முரளி மோகன் (42) ஆகிய இருவரை தாக்கினர். இதில் படுகாயமடைந்த இருவரும் ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கோவிந்தராஜூ கொடுத்த புகாரின்பேரில் பேரிகை போலீசார் வினய் தேஜா, வினோத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு