தமிழக செய்திகள்

விவசாயியை தாக்கியவர் கைது

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு அருகே உள்ள கதவணை புதூரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 40). விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர் சங்கர் (55). உறவினர்கள். இந்த நிலையில் பொது விவசாய கிணற்றை பயன்படுத்துவதில் இவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சங்கர் பொது வழியில் இருந்த தென்னை மரத்தில் இருந்த ஓலையை வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவிந்தன் கேட்டபோது இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோவிந்தன் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக அவர் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்