தமிழக செய்திகள்

ஈரோட்டில்இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நடைபயணம்

ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நடைபயணம் சென்றனா.

தினத்தந்தி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், நாடு முழுவதும் பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவோம், நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்போம் மாற்றத்தை நோக்கி என்பதை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோட்டில் நேற்று மாணிக்கம்பாளையத்தில் நடைபயணம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார்.

நடைபயணத்தில் கலந்து கொண்டவர்கள் 'பா.ஜ.க. மதவெறி பாசிசத்திலிருந்தும், ஊழல் அடிமைத்தளத்திலிருந்தும் நாட்டினை மீட்போம், மக்கள் நல்லிணக்கமும், சமூக நீதியும் நிலைபெற குரல் கொடுப்போம்,' என கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். நடைபயணம் முக்கிய வீதிகள் வழியாக கனிராவுத்தர் குளம் பஸ் நிறுத்தம் அருகே சென்று நிறைவடைந்தது.

இதில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ராணி, பிரபு, வட்டார துணை செயலாளர்கள் எம்.கல்யாணசுந்தரம், கபில்தேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு