தமிழக செய்திகள்

பவானியில் 24.6 மி.மீட்டர் மழைப்பதிவுசேறும், சகதியுமாக மாறிய ஈரோடு மார்க்கெட்

பவானியில் 24.6 மி.மீட்டர் மழைப்பதிவானது. சேறும், சகதியுமாக ஈரோடு மார்க்கெட் மாறியது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாநகரில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் ஈரோடு ஈ.வி.என்.ரோடு, காந்திஜிரோட்டில் ஆங்காங்கே சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக ரோட்டில் வாகனங்களை இயக்குவதில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். மழையால் ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் வியாபாரிகளும், காய்கறி வாங்க வந்த மக்களும் அவதி அடைந்தனர்.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பவானி - 24.6

கோபிசெட்டிபாளையம் - 23.2

ஈரோடு - 20

வரட்டுப்பள்ளம் அணை - 18.8

எலந்தகுட்டைமேடு - 18.2

கொடிவேரி அணை - 18

அம்மாபேட்டை - 18

சத்தியமங்கலம் - 15

நம்பியூர் - 13

கவுந்தப்பாடி - 10

குண்டேரிப்பள்ளம் அணை - 3.2

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்