தமிழக செய்திகள்

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டுபோனது.

திருச்சி பாலக்கரை கீழ கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதுரைவீரன்(வயது 46). இவர் கீழப்புதூரில் உள்ள பாலக்காட்டு பகவதிஅம்மன் கோவில் நிர்வாகத்தில் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மீண்டும் கோவிலை திறந்து உள்ளே சென்றார். அங்கு இருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மதுரைவீரன் பாலக்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு