தமிழக செய்திகள்

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் உடைப்பு

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய தடுப்பணை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.

விழுப்புரம்,

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 25 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. இதை அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்துவைத்தார். இந்நிலையில் தளவானூர் அருகே தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் கலெக்டர் மோகன், அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த தடுப்பணையில் 2-வது முறையாக உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு