தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி பலி

விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தொழிலாளி பலியானார்.

தினத்தந்தி

விராலிமலை தாலுகா விராலூர் ஊராட்சி குள்ளம்பட்டியை சேர்ந்தவர் நல்லான் மகன் நல்லுச்சாமி (வயது 47). தொழிலாளி. இவர், சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் விராலூர் அருகே மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வானதிராயன்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக நல்லுச்சாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த நல்லுச்சாமியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த நல்லுச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு