தமிழக செய்திகள்

மத்திகிரி அருகேகுடியிருப்பு பகுதியில் கழிவுகள் கொட்டியவர்கள் மீது வழக்கு

மத்திகிரி:

தளி சாலையில் கர்னூர் அருகே தனியார் குடியிருப்பு லேஅவுட் பகுதியில் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டுவதாகவும், இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் கவுசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் இதுதொடர்பாக மத்திகிரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடியிருப்பு பகுதியில் கழிவுகளை கொட்டி சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT