தமிழக செய்திகள்

கல்குவாரியில் பொருட்களை சேதப்படுத்திய 10 பேர் மீது வழக்கு

வடக்கு விஜயநாராயணம் அருகே கல்குவாரியில் பொருட்களை சேதப்படுத்திய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இட்டமொழி:

பரப்பாடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வேதநாயகம் மகன் இஸ்ரவேல் பிரபாகரன் (வயது 44). இலங்குளம் பஞ்சாயத்து தலைவரான இவர் வடக்கு விஜயநாராயணம் அருகே சீலாங்குளத்தில் இருந்து வெங்கட்ராயபுரம் செல்லும் சாலையில் அரசு உரிமம் பெற்று கல்குவாரி நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று நெல்லையைச் சேர்ந்த புலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பவானி வேல்முருகன் உள்ளிட்ட 10 பேர் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் கல்குவாரிக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியும், அங்கிருந்தவர்களை அவதூறாக பேசி மிரட்டி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இஸ்ரவேல் பிரபாகரன் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பவானி வேல்முருகன் உள்ளிட்ட 10 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்