கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

கலைஞர் நினைவிடம் திறப்பு விழாவுக்கு வாருங்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

கலைஞர் நினைவிடம் வருகிற 26-ந்தேதி திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

வருகிற 26-ந்தேதி இரவு 7 மணிக்கு கலைஞர் நினைவிடம் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை கேள்வி பதில் நேரத்தில் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "கலைஞர் நினைவிடத்தில் கட்டுமான பணிகள் முடிவடைந்துவிட்டது. சிறப்பு விழாவாக கொண்டாட விரும்பவில்லை. நிகழ்ச்சியாகவே நடத்த முடிவெடுத்துள்ளோம். அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 26-ம் தேதி இரவு 7 மணிக்கு திறக்கப்படும்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி, தோழமைக் கட்சி என அனைத்துக்கட்சி சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்" என்று முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு