தமிழக செய்திகள்

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குறைதீர்வு முகாம்

அரியலூர் மருத்துவக்கல்லூரியில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது.

தினத்தந்தி

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான குறைதீர்வு முகாம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு ஆணைய உறுப்பினர் திவ்யாகுப்தா தலைமை தாங்கினார். இதில் ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் புகார்கள் குறித்து குழந்தைகளிடம் விசாரித்தார். மேலும், குழந்தைகளின் பாதுகாப்பு, பள்ளி இடைநிற்றல், உடல் ரீதியான தண்டனை, ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாப்பு உள்பட பல்வேறு கோரிக்கை மற்றும் புகார்கள் தொடர்பான 300-க்கும் மேற்பட்ட மனுக்களை நேரடியாக பெற்று அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் பல்வேறு அதிகாரிகள், பொதுமக்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை