அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மெரிட் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி தாளாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு பட்டம் வழங்கி பேசினார். இதில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.