தமிழக செய்திகள்

கடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதியதில் முதியவர் சாவு

தினத்தந்தி

மொரப்பூர்:

தர்மபுரி மாவட்டம் செட்டிகரை அருகே உள்ள பள்ளகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 70). இவருடைய மகன் வழி பேத்திகள் கடத்தூர் அருகே உள்ள கந்தகவுண்டனூரில் உள்ளனர். அவர்களை பார்ப்பதற்காக காளியப்பன் தனது மோட்டார் சைக்கிளில் தர்மபுரியில் இருந்து கந்தகவுண்டனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது போசிநாயக்கன அள்ளி அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் காளியப்பன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்