தமிழக செய்திகள்

அதிமுகவில் இணையவரவில்லை; வாழ்த்து தெரிவிக்க வந்தேன் - புகழேந்தி

அதிமுகவில் இணையவரவில்லை, வாழ்த்து தெரிவிக்க வந்தேன் என்று அமமுகவின் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு அமமுக புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

சேலத்தில் எனது மாமியார் வீடு உள்ளது. இடைத்தேர்தலில் 2 தொகுதிகளில் இமாலய வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்க வந்தேன். தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவிக்க வந்தேன். இப்போது அதிமுகவில் சேரப்போவது இல்லை.

ஆட்சி, கட்சி எந்த வித ஆபத்தும் இல்லாமல் அதிமுக வீறு நடைபோடுகிறது. அதிமுகவில் சேருவது என்றால் உங்களுக்கு தகவல் தெரிவிப்பேன். நான் தற்போது அமமுகவில் தான் உள்ளேன். முதல்வரும் நானும் 35 ஆண்டுகால நண்பர்கள், தினகரனால் அனைத்தையும் இழந்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு