தமிழக செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, உதவி உபகரணங்கள், வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மொத்தம் 111 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 26 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. ஸ்மார்ட் கார்டு, அடையாள அட்டை 25 பேருக்கு வழங்கப்பட்டது. மேலும் ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. முகாமில் வட்டார போக்குவரத்து துறை அலுவலர் முருகானந்தம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு