தமிழக செய்திகள்

காய்ச்சலை தடுக்க கபசுர குடிநீர் வினியோகம்

காய்ச்சலை தடுக்க கபசுர குடிநீர் வினியோகம்

வால்பாறை

வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் ஓரளவிற்கு மழை பெய்தது. அதன்பின்னர் மழை குறைந்து விட்டது. இந்த நிலையில் கடந்த மாதத்தில் 2-வது வாரத்தில் கனமழை பெய்தது. அதன்பின்னர் தென்மேற்கு பருவமழை குறைய தொடங்கியது. கடந்த 2 வாரமாக கனமழை பெய்யாமல் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

மேலும் பகலில் கடுமையான வெயிலும் வாட்டி வருகிறது. இந்த மழையும், வெயிலும் கலந்த மாறுபட்ட காலநிலையால் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையம், நகராட்சி அலுவலக வளாகம், பயணிகள் நிழற்குடைகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு