தமிழக செய்திகள்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 27-ந்தேதி நடைபெற உள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனம் மூலம் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 27-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. முகாமில் கலந்து கொள்ள உள்ள மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளியின் சுய விபரக்குறிப்பு- 3 நகல்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்- 3, கல்விச்சான்றிதழ்களின் நகல்கள்- 3, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை- 3 நகல்கள் மற்றும் ஆதார் அட்டை- 3 நகல்களுடன் முகாமில் கலந்துக் கொள்ளலாம். காஞ்சீபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறும் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்