தமிழக செய்திகள்

இடப்பிரச்சினையில் கோஷ்டி மோதல்

இடப்பிரச்சினையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் தெற்கு தெருவில் வசித்து வருபவர் சாமிதுரை(வயது 58). இவரது வீட்டுக்கு அருகில் வசித்து வருபவர் சுந்தரேசன்(60). இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே திடீரென ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாமிதுரை மற்றும் சுந்தரேசன் ஆகியோர் தா.பழூர் போலீசில் தனித்தனியாக கொடுத்த புகாரை விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, சாமிதுரை கொடுத்த புகாரின் பேரில் சுந்தரேசன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த சுப்பிரமணியன், அரவிந்தன் ஆகியோர் மீதும், சுந்தரேசன் கொடுத்த புகாரின் பேரில் சாமிதுரை மற்றும் வானதிரையன்பட்டினம் கிராமத்தை சேர்ந்த அவரது உறவினர் பாஸ்கர் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்