தமிழக செய்திகள்

போலி டாக்டர் கைது

செந்துறையில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

நத்தம் அருகே செந்துறை பகுதியில், போலி டாக்டர்கள் அதிகம் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையில், காசநோய் துணை இயக்குனர் ராமச்சந்திரன் மற்றும் நத்தம் போலீசார் செந்துறை பகுதியில் உள்ள மருந்து கடை அருகே உள்ள மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 10-ம் வகுப்பு படித்துள்ள சுபாஷ் என்பவர், அங்கு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து நத்தம் போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஊசி, மருந்து, மாத்திரைகளை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை