தமிழக செய்திகள்

தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து

தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

ஆலங்குடி அருகே அரையப்பட்டியில் இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலை உள்ளது. தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் தீயணைப்புத்துறை நிலை அலுவலர் மற்றும் மீட்பு பணி குழு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் மஞ்சுத்தூள் அனைத்தும் எரிந்து நாசமானது. 

SCROLL FOR NEXT