தமிழக செய்திகள்

காளி கோவிலில் பூச்சொரிதல் விழா

காளி கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது

சிவகங்கை

சிவகங்கை பஸ் நிலையம் எதிரில் உள்ள பிள்ளை வயல் காளி கோவிலில் பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் 8 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டும் விழா கடந்த 7-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. சிவகங்கை தெப்பக்குளத்தில் இருந்து பூ கரகம் எடுத்து வந்தனர். பின்னர் அம்மன் சன்னதி முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தது. ஆனி கடைசி வெள்ளியான நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் காளியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு