தமிழக செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், சின்னதாராபுரம் அருகே உள்ள எலவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) செல்வமணி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் கே.கருணாநிதி, எலவனூர் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியை கயல்விழி அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. மொஞ்சனூர் பி.ஆர்.இளங்கோ கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். முடிவில் பள்ளியின் முதுகலை ஆசிரியை பூரணி நன்றி கூறினார். இதில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து சின்னதாராபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தும்பிவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. விலையில்லா சைக்கிள்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு