தமிழக செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

முதுகுளத்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

தினத்தந்தி

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள தேரிருவேலி ராவுத்தர் சாஹிப் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியருக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் அபூபக்கர் சித்திக் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் கோதண்டம், ஜமாத் தலைவர் அலாவுதீன், பள்ளியின் தாளாளர் முபாரக் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கரீம் கனி அனைவரையும் வரவேற்றார். இதில் 5 மாணவர்கள், 23 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை ஊராட்சி மன்ற தலைவர் அபூபக்கர் சித்திக் வழங்கினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது