தமிழக செய்திகள்

அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்

அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

கரூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 13-வது மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் வரவேற்புரையாற்றினார். மாநில துணை பொதுச் செயலாளர் ஞானத்தம்பி தொடக்க உரையாற்றினார். கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு அறிவிக்கும் தேதியில் வழங்கிடவும், முடக்கப்பட்ட சரண் விடுப்பை அனுமதித்திடவும் வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உரிய வீட்டு வாடகை படி, நகர ஈட்டுபடி அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். 

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்