தமிழக செய்திகள்

ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்

ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே தந்தையே மகனையும், தாயாரையும் வெட்டி கொலை செய்துள்ளார் என்ற செய்தியும், இந்தத் தாக்குதலில் மருமகள் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியும் மிகுந்த மன வேதனை அளிக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.

இதுபோன்ற ஆணவப் படுகொலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு இதனைத் தடுத்து நிறுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது