தமிழக செய்திகள்

3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி

3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

சென்னை,

அனைத்து கட்டடங்களிலும் 3 மாதத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

தொழில் நிறுவனங்கள், வீடு உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும், அரசு கட்டடங்களிலும் கட்டமைப்பை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.