சென்னை :
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 70,017 ஆக உள்ளது. 1,082 பேர் உயிரிழந்த நிலையில், 44,882 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
24,852 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 1,162 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 58.24 சதவீதம், பெண்கள் 41.76 சதவீதம். நேற்று மட்டும் சென்னையில் 9,514 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில், மண்டல வாரியாக கெரேனா பாதிப்பு விவரம் பின்வருமாறு:-
திருவொற்றியூர் - 1,243
மணலியில் 551
மாதவரத்தில் 909
தண்டையார்பேட்டை 1,810
ராயபுரம் 1,999 பேரும்
திருவிக நகர் 1,898
அம்பத்தூர் 1,314
அண்ணா நகர் 2,383
தேனாம்பேட்டையில் 2,447
கேடம்பாக்கத்தில் 2,990
வளசரவாக்கத்தில் 1,228
ஆலந்தூர் 968
அடையாறு 1,673
பெருங்குடியில் 890
சோழிங்கநல்லூர் 587 பேரும் கெரேனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.