தமிழக செய்திகள்

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு

தேனி நகர் பெரியகுளம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தேனி நகர் பெரியகுளம் சாலையில்பெத்தாட்சி விநாயகர் கோவிலில் இருந்து மின்வாரிய பண்டகசாலை வரை நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த கடைகளை அகற்றிக்கொள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் அங்கிருந்த 13 கடைகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்பட்ட இடத்தில் மீண்டும் யாரும் ஆக்கிரமிப்பு செய்து விடாமல் தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நேற்று அங்கு வேலி அமைக்கும் பணி நடந்தது. சாலையோரம் கல்தூண்கள் ஊன்றி முள்கம்பி வேலி அமைக்கும் பணிகள் நடந்தன. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு