தமிழக செய்திகள்

திருத்தணி அருகே மீட்கப்பட்ட நீர்நிலை புறம்போக்கு நிலத்தை சுற்றி இரும்பு வேலி அமைப்பு

திருத்தணி அருகே மீட்கப்பட்ட நீர்நிலை புறம்போக்கு நிலத்தை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருத்தணி தாலுகா தாழவேடு காலனியில் புல எண்.242-ல் குட்டை புறம்போக்கு 2 ஏக்கர் அரசு நிலம், தும்பிக்குளம் கிராமத்தில் புலஎண். 222/3 குட்டை புறம்போக்கு 90 சென்ட் அரசு நிலத்தை, அதே பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 பேர் ஆக்கிரமித்து பயிரிட்டு இருந்தனர். ஆக்கிரமித்த நிலத்தை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பலமுறை வருவாய் துறையினர் 2 விவசாயிகளிடம் அறிவித்திருந்தும் பலனில்லை.

இந்நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. ஹஸ்ரத்பேகம் உத்தரவின்படி, வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட அரசு நிலத்தில் வருவாய்த் துறையினர் மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட தாழவேடு, தும்பிக்குளம் ஆகிய 2 இடத்தில் பொதுமக்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க நிலத்தைச் சுற்றி இரும்பு வேலிகளை திருத்தணி தாசில்தார் விஜயராணி தற்போது அமைத்துள்ளார். மீட்கப்பட்ட இந்த நிலத்தின் அரசு சந்தை மதிப்பு ரூ.60 லட்சம் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு