தமிழக செய்திகள்

சென்னை : ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். #ITRaid | #IncomeTaxRaid

சென்னை,

கேரள மாநிலம் திருச்சூரை தலைமை அலுவலகமாக கொண்டு ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை இயங்கி வருகிறது. அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா என 11 நாடுகளிலும், இந்தியாவில் 11 மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் 21 இடங்களிலும் இந்த நகைக்கடைகள் செயல்படுகின்றன. நாடு முழுவதும் 130 இடங்களில் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடைகள் உள்ளன. இந்த நகைக்கடைகளில், மத்திய அரசின் வழிக்காட்டுதலின்படி விற்பனை நடைபெறாமல், பல கோடி வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நாடு முழுவதும் 130 இடங்களில் உள்ள இந்த நகைக்கடைகளில் ஒரே நேரத்தில் அதிரடியாக நேற்று சோதனை நடந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையால் வேலைக்கு வந்த நகைக்கடை ஊழியர்கள் கடைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். #ITRaid | #IncomeTaxRaid | #Joyalukkas

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்