தமிழக செய்திகள்

புகழூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு

புகழூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு பெற்றது.

தினத்தந்தி

நொய்யல்

தென்னிலை, க.பரமத்தி, புகழூர் ஆகிய 3 வருவாய் குறுவட்டத்திற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) புகழூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதையடுத்து நிறைவு விழா நடந்தது. இதற்கு கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 127 மனுக்கள் பெற்றார். இதில் உடனடியாக 55 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், நகராட்சி கமிஷனர் கனிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்