தமிழக செய்திகள்

தடுப்புகம்பி மீது ஜீப் மோதி 3 பேர் காயம்

அய்யலூர் அருகே தடுப்புகம்பி மீது ஜீப் மோதி 3 பேர் காயம் அடைந்தனர்.

கும்பகோணம் அருகே உள்ள பந்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 52). இவர், தனது நண்பர்களான மதிவாணன், பாலமுருகன் ஆகியோருடன் ஒரு காரில் கும்பகோணத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்றார். ஜீப்பை மதிவாணன் ஓட்டிச் சென்றார். நேற்று அதிகாலை திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் மூக்கரபிள்ளையார் கோவில் அருகே ஜீப் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையின் நடுவே இருந்த தடுப்பு கம்பி மீது பயங்கரமாக மோதியது. இதில் வடிவேல், மதிவாணன், பாலமுருகன் ஆகிய 3 பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு