தமிழக செய்திகள்

10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் மதிப்பெண் பட்டியல் - பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு

10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் மதிப்பெண் பட்டியல் வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீட்டுள்ளது.

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இதில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அதிப்படையிலும், செய்முறைத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என்று குறிப்பிட்டு மதிப்பெண் பட்டியல் வழங்க தேர்வுத்துறைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு விரைவில் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT