தமிழக செய்திகள்

3 டன் ரேஷன் அரிசியுடன் மினி லாரி பறிமுதல்

திருக்கோவிலூர் அருகே 3 டன் ரேஷன் அரிசியுடன் மினி லாரி பறிமுதல் டிரைவர் கைது

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை போலீஸ் சரகத்துக்குட்பட்ட கழுமரம் கிராமம் கோட்டகம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி செல்ல இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 3 பேர் மினி லாரில் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். இதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் மினி லாரியில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் பிடிபட்டவர் மினி லாரி டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருணாச்சலம் தெருவை சேர்ந்த ஞானசேகரன் மகன் நிர்மல்ராஜ்(வயது 32) என்பதும், 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வெளியூருக்கு கடத்தி செல்ல இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நிர்மல்ராஜை கைது செய்த போலீசார் மினி லாரியுடன் 3 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய இருவரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு