தமிழக செய்திகள்

வருகிற 25-ம் தேதி சென்னை புறநகர் ரெயில் சேவை ஞாயிறு அட்டவணையின்படி இயங்கும் - தெற்கு ரெயில்வே தகவல்

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரெயில்கள் அனைத்தும் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ஏசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில், பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், வருகிற 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பொது விடுமுறை விடப்படுவதால் சென்னை புறநகர் ரெயில்கள் ஞாயிறு அட்டவணையின்படி இயங்கும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரெயில்கள் அனைத்தும் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது