தமிழக செய்திகள்

இணையவழி சூதாட்டம், விளையாட்டு சமூகத்தில் தீய தாக்கங்களை ஏற்படுத்துகிறது: முருகானந்தம் பேச்சு

கொரோனா காலகட்டத்தில் இணையவழி சூதாட்டம், விளையாட்டுகள் அதிகமாக பரவியது என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை சாந்தோமில் நகராட்சி நிர்வாக இயக்குநரக கூட்ட அரங்கில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் 'இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள்'குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை தலைமைச் செயலாளர் முருகானந்தம் தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் தலைமைச் செயலாளர் முருகானந்தம் பேசியதாவது:-

இணையவழி சூதாட்டம், இணையவழி விளையாட்டு சமூகத்தில் தீய தாக்கங்களை ஏற்படுத்துகிறது. கொரோனா காலகட்டத்தில் இணையவழி சூதாட்டம், விளையாட்டுகள் இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் பரவியது. தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் இதனை ஒழுங்குபடுத்தி வருகிறது. திமுக அரசு இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை தடுக்க சட்டம் இயற்றியது. இது தொடர்பாக பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது