சென்னை,
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகிற 20-ந்தேதி காலை 10 மணியளவில் தமிழக கர்நாடக எல்லையான ஓசூரில் தே.மு.தி.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களும் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.