தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதம் - சரிசெய்யும் பணிகள் தீவிரம்

தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் பல்வேறு கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன.

தினத்தந்தி

தூத்துக்குடி,

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் பல்வேறு கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன. திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள ஆறுமுகநேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. மேலும் அங்கு 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. அவற்றை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு