தமிழக செய்திகள்

5 கிளைகளுடன் பனைமரம்

5 கிளைகளுடன் பனைமரம்

பனைக்குளம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட உச்சிப்புளி அருகே உள்ள நொச்சியூரணி கிராமம். இந்த நொச்சியூரணி கிராமத்தில் இருந்து புதுமடம் கிராமத்திற்கு செல்லும் கடற்கரை சாலையோரம் ஏராளமான பனை மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இதில் ஒரே ஒரு பனைமரத்தில் 5 கிளைகளுடன் கூடிய ஒரு பனைமரம் வளர்ந்து நிற்கிறது. 5 கிளைகளுடன் வளர்ந்து நிற்கும் இந்த பனைமரத்தை அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களும் ஆச்சரியத்தோடு பார்த்து செல்கின்றனர்.