சென்னை,
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் 5.4 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது 53.84 லட்சம் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.
முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய பலர், 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருந்தாலும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்; சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; முகக்கவசம் அணிய வேண்டும்.
மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.