தமிழக செய்திகள்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கேற்ப எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று இவற்றின் விலை உயர்ந்து விற்பனையானது. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.27க்கும், டீசல் விலை ரூ.96.93க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் ஒரு லிட்டர்

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் உயர்ந்து ரூ101.53க்கும், டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து ரூ.97.26க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது