தமிழக செய்திகள்

மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் - ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழிப்பறி

தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்கொள்ளையர்கள் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழிப்பறி செய்துள்ளனர்.

நாகை,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 80-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அதில் சில மீனவர்கள் சுமார் 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, 5 ஃபைபர் படகுகளில் இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்களை சுற்றிவளைத்துள்ளனர்.

அந்த படகுகளில் இருந்த 20 கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டியும், மரக்கட்டைகளைக் கொண்டு தாக்கியும் உள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்த மீன்பிடி வலை, திசைகாட்டும் கருவி, 3 செல்போன்கள், டீசல், பேட்டரி உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து மீனவர்கள் அளித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்