தமிழக செய்திகள்

போலீசார் விசாரணை

தஞ்சையில் தூக்கில் தொங்கிய ஆண்பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை கீழவாசல் ஆடக்கார தெருவில் உள்ள கட்டண கழிப்பறை கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள மரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து புளியந்தோப்பு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, குமார், சிறப்பு இன்ஸ்பெக்டர் காளிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தூக்கில் தொங்கியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விவரம் தெரியவில்லை. இதையடுத்து தூக்கில் தொங்கியவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தூக்கில் பிணமாக தொங்கியவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு