தமிழக செய்திகள்

மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டம்

வத்தலக்குண்டுவில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

வத்தலக்குண்டுவில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. கூட்டத்திற்கு மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின்வாரியம் தொடர்பான குறைகள் குறித்து மனுக்களை அளித்து பயன்பெறலாம். இத்தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT