தமிழக செய்திகள்

குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம்

பாபநாசம் பேரூராட்சியில் ரூ.14கோடியே 82 லட்சத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

தினத்தந்தி

பாபநாசம் பேரூராட்சியில் அம்ரூட் 2.0 திட்டத்தின் கீழ் 3741 வீடுகளுக்கு ரூ.14 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு தஞ்சை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கல்யாணசுந்தரம் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் நாசர், தாமரைச்செல்வன், மாவட்ட துணை செயலாளர்கள் கோவி அய்யாராசு, துரைமுருகன் தமிழ்நாடு குடிநீர் மேம்பாட்டு கழகத்தின் திட்ட பொறியாளர் தியாகராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது